ஆஸிக்கு விழுந்தது உதை;மகுடம் சூடியது இந்தியா

பிரிஸ்பேன், மார்ச் 05
கொமன்வெல்த் பாங்க் முத்தரப்புத் தொடரின் சம்பியன் பட்டத்தை இந்திய அணி கைப்பற்றிக்கொண்டது. நேற்று நடந்த பரபரப்பான இரண்டாவது இறுதியாட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியதன் மூலம் சம்பியன் கிண்ணத்தைத் தன்வசமாக்கியது. சச்சின் டெண்டுல்கர் 91 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதுபோலவே பந்துவீச்சில் கலக்கிய பீரவீண் குமாரும் ஆஸியின் கொட்டத்தை அடக்க பக்கபலமாகவிருந்தார்.
இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் முத்தரப்புத் தொடர் ஒன்றில் சம்பியன் கிண்ணத்தை வெல்வது [...]